2024-இல் வேலைவாய்ப்புகள் 6சதவீதம் அதிகரித்துவிட்டது என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. இது முற்றிலும் பொய்யானது ஆகும். மோடி ஆட்சியின் கீழ் ரிசர்வ் வங்கி போன்ற மிக முக்கிய நிறுவனங்கள் அளிக்கும் தரவுகளின் நம்பகத்தன்மை கூட அதலபாதாளத்திற்கு சென்றிருக்கிறது. உண்மை யில் 2013ல் 5.42 சதவீதமாக இருந்த இந்தியாவின் வேலையின்மை விகிதம் 2024 ஜூன் மாத விபரங்களின்படி 9.2சதவீதமாக மிகப்பெரும் அளவிற்கு அதிகரித்துள்ளது. 2019 வரை 6சதவீதத்திற்குள்ளேயே இருந்த வேலையின்மை விகிதம் 2020ல் 8சதவீதமாக அதிகரித்தது. 2023ல் 8.03சதவீதமாக அதிகரித்த வேலையின்மை 2024ல் உச்சத்தை தொட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. ஆனால் மோடி அரசின் பொய்ப்பிரச்சாரம் அதை மறுக்கிறது. வேலையின்மை என்பது வெற்று வாய்ச்சவடலாகவே இருக்கிறது. மோடி அரசுடன் ரிசர்வ் வங்கியும் சேர்ந்து கொண்டு மக்களை ஏமாற்றுகிறது.