சென்னை:
தனியார் துறையிலும் 5 விழுக் காடு இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத் துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் பா. ஜான்சிராணி, பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:-
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை தெலுங்கானா, புதுச் சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங் களில் ரூ.3,000-க்கும் மேலாக வழங்கப்பட்டு வருகிறது.நலத்திட்டங்களை அமலாக்குவதில் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழகத்திலும் இந்த உதவித் தொகையை குறைந்த பட்சம் ரூ.3,000 ஆகவும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,000 ஆகவும் தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.தனியார் துறை பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 விழுக்காடு இடங்களை உத்தரவாதப்படுத்த அமலில் உள்ள ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம்-2016 வலியுறுத்துகிறது.எனினும், இதற்காக தனியார் துறைகளுக்கு அரசு ஊக்கத் தொகை வழங்குவது குறித்து சட் டம் கூறியிருப்பதால் நடைமுறைக்கு வரவில்லை.எனவே, தனியார் துறை பணிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 விழுக் காடு இடங்களை உத்தரவாதப் படுத்தி தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.அரசுத்துறைகளில் உள்ள பின்னடைவு காலிப்பணியிடங் களை 3 மாத காலத்திற்குள் அறிவித்து முழுமையாக நிரப்பிட 03.10.2013 அன்று உச்சநீதிமன்ற முதன்மை அமர்வு தீர்ப்பளித்தது.எனினும், இதுவரை தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள பின்னடைவு காலிப்பணியிடங்களை முழுமையாக அறிவித்து நிரப்பப்படவில்லை.எனவே, இதுகுறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டு, உடனடியாக நிரப்ப வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.