மாணவர்களிடம் பெற்ற நன்கொடையை திருப்பித் தரக் கோரிக்கை
திருவண்ணாமலை,ஜூன் 25- தமிழகத்தில், 1992 ஆம் ஆண்டு கல்வி நிலை யங்களில் கட்டாய நன்கொடை தடுப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது திரு வண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசுக் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகம் நன்கொடை பெற்றுள்ளது. எனவே கல்லூரி நிர்வாகம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், மாணவர்களிடம் பெறப்பட்ட தொகையை திருப்பித் தரவேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாண வர் சங்கத்தின் மாவட்ட ஆட்சியர் ஆர். விக்னேஷ், செயலாளர் வி.கோபிநாத், மாவட்ட குழு உறுப்பினர் இமயவர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.