வேலூர், ஜூலை 13: வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலை யொட்டி, ஆவணங்களின்றி எடுத்துச் செல் லும் அதிகபட்சமாக தொகையை ரூ. 2 லட்ச மாக உயர்த்த வேண்டும் என்று வேலூர் மாவட்ட வணிகர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலை யொட்டி மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப் பட்டுள்ளன. இதையொட்டி, 18 பறக்கும் படை, 18 நிலைக்கண்காணிப்புக் குழு அமைக் கப்பட்டு வாகன சோதனை உள்ளிட்ட கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. வாகன சோதனையின்போது உரிய ஆவ ணங்களின்றி ரூ. 50 ஆயிரத்திற்கும் அதிக மாக ரொக்கமோ, ரூ. 10 ஆயிரத்துக்கும் அதிக மாக தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருள் களோ கொண்டு சென்றால் அவை பறிமுதல் செய்து கருவூலத்தில் சேர்க்கப்படுகின்றன. இதனால், விவசாயிகளும், வணிகர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலர் ஆர்.பி.ஞானவேலு செய்தி யாளர்களிடம் கூறியதாவது: “நாடு முழுவதும் 20 கோடி வணிகர்கள் உள்ள நிலையில் 1.50 கோடி பேர் மட்டுமே முறையாக ஜிஎஸ்டி பதிவு செய்துள்ளனர். மற்றவர்களில் பெரும்பகுதியினர் ஆண்டுக்கு ரூ. 40 லட்சத்துக்கு கீழ் வியாபாரம் செய்யக்கூடியவர்களாவர். இந்த வணிகர்க ளும் நாளொன்றுக்கு வழக்கமான வியா பாரத்திற்கு எந்தவொரு ஆவணங்களின்றி பல லட்ச ரூபாய் எடுத்துச் செல்வதுண்டு. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் பெருமள வில் உள்ள வாரச் சந்தைகளில் வியாபாரம் செய்வோர் ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல் தொகையை கொண்டு செல்ல வேண்டும். இந்தச் சூழ்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் எனக் கூறி அவர்களிடம் உள்ள தொகையை பறிமுதல் செய்வதால் வணிகர் கள் பெருமளவில் பாதிக்கப்படக் கூடும். இது தவிர, மத்திய அரசே ரூ. 5 லட்சம் வரை வரு மானவரி விலக்கு அளித்துள்ளது. எனவே, வியாபாரிகளின் நலன் கருதி 2 லட்ச ரூபா யாக உயர்த்த வேண்டும். இதற்கான உத்த ரவை மாவட்டத் தேர்தல் அதிகாரி பிறப்பிக்க வேண்டும்,” என்றார். இந்த சந்திப்பின் போது வேலூர் காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் ஏ.பாலு, ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் ஏ.வி. எம்.குமார், பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.