tamilnadu

img

பழுதடைந்த மின்மாற்றிகளை மாற்றுக: சிபிஎம் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, நவ. 29- திருபுவனை பகுதியில் உள்ள பழுத டைந்த மின்மாற்றிகளை உடனே மாற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருபுவனை மின்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி திருபுவனை தொகுதியில் தொடர்ந்து ஏற்படும் மின்வெட்டை சரிசெய்ய வேண்டும், கிராமப்புறச் சாலைகளில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும், நீண்டகாலமாக தொகுதியில் உள்ள பழு தடைந்த மின்மாற்றிகளை மாற்றிட வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மண்ணாடிப்பட்டு கொம்யூன் செயலாளர்  ரகு.அன்புமணி தலைமை தாங்கினார். இதில்  செயற்குழு உறுப்பினர் வின்சென்ட், பிர தேசக்குழு உறுப்பினர்கள் உலகநாதன், சங்கர் கொம்யூன்குழு உறுப்பினர்கள் கலிவர தன், முத்து, ஆனந்து, தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். ஈருதியில் திருபுவனை மின்துறை பொறி யாளரை சந்தித்து மனு அளித்தனர். மனுவை  பெற்றுக் கொண்ட மின்துறை பொறியாளர்  நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.