விழுப்புரம், டிச.6- பெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் விழுப்புரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் 5 கிலோ அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை பாக்கெட் செய்து நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது வரு கிறது.
இந்த பணிகளை தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளர் பெ.அமுதா, மாவட்ட ஆட்சியர் சி.பழனி ஆகியோர் வெள்ளிக்கிழமை (டிச,6) பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நெடுஞ்சாலை கள் மற்றும் சிறு முகங்கள் துறை, அரசுச் செயலாளர் ஆர்.செல்வராஜ்,கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையா உடனி ருந்தனர்.