tamilnadu

img

வயநாடு மக்களுக்கு நிவாரண நிதி

சென்னையில் நடைபெற்ற போக்குவரத்து ஊழியர் சம்மேளன கருத்தரங்கில் பங்கேற்ற தொழிலாளர்களிடம் வயநாடு நிவாரண நிதி கோரி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. உண்டியல் ஏந்தி சென்ற நிர்வாகிகளிடம் 27 ஆயிரத்து 500 ரூபாயை தொழிலாளர்கள் வழங்கினர். அதனை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனிடம் தலைவர்கள் வழங்கினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக்குழு சார்பில், தீக்கதிர் நாளிதழுக்கு இரண்டாம் கட்டமாக 240 சந்தாக்களுக்கான தொகை, (முதற்கட்டம் 150), கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது. மேலும், வயநாட்டில் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, சிபிஎம் தருமபுரி மாவட்டக்குழு சார்பில், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 421 ரூபாய் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிசுபாலன், மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.