tamilnadu

img

விஷச்சாராய மரணம்: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கூடுதல் நிவாரணங்கள் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கூடுதல் நிவாரணங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் 88 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கூடுதல் நிவாரணங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து சட்டப்பேரவையில் அவர் கூறியதாவது: "பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
பெற்றோர் இருவரையும் இழந்து ஆதரவின்றி இருக்கும் குழந்தைகளுக்கு, 18 வயது நிறைவடையும் வரை மாத பராமரிப்பு தொகையாக ரூ.5,000 வழங்கப்படும். உடனடி நிவாரண தொகையாக அவர்களது வங்கிக் கணக்கில் தலா ரூ.5 லட்சம் நிலையான வைப்புத் தொகையாக வரவு வைக்கப்படும்.
பெற்றோர் ஒருவரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்.
அரசு மற்றும் அரசின் நிதி உதவி பெறும் இல்லங்கள் மற்றும் விடுதிகளில் குழந்தைகள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்க்கப்படுவர்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.