tamilnadu

img

ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமனம்  

ஐபிஎல் 2022 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.  

ஐபிஎல் போட்டி வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து மகேந்திர சிங் தோனி விலகியுள்ளார்.  

அதனைதொடர்ந்து தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய நிலையில் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2012 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அங்கமாக இருந்து வரும் ஜடேஜா, சிஎஸ்கேயை வழிநடத்தும் 3ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

2008 முதல் சென்னை அணிக்காக கேப்டனாக விளையாடி வரும் தோனி இந்த சீசனில் சென்னை ஒரு வீரராக மட்டுமே களமிறங்குவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தோனி இதுவரை சென்னை அணிக்காக 204 போட்டிகளில் கேப்டனாக விளையாடியுள்ளார். தோனியின் தலைமையில் சென்னை அணி 4 ஐபிஎல் கோப்பைகளையும் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

;