tamilnadu

img

விழுப்புரம் அரசு கல்லூரியில் ரவிக்குமார் எம்பி ஆய்வு

விழுப்புரம், ஜன. 18- விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் தாலுகாவில் இயங்கி வரும் அரசு  கலைக் கல்லூரியில்  மக்களவை உறுப்பினர்  துரை.ரவிக்குமார் சென்று ஆய்வு செய்தார். அப்போது கல்லூரி முதல்வரிடம் கல்லூரி யின் நிலை குறித்தும், குறைகளையும் கேட்ட றிந்தார். தொடர்ந்து கல்லூரியில் பணிபுரி யும் பேராசிரியர்களிடமும், மாணவர்களிட மும் அவர்களுக்கான குறைகளை கேட்ட றிந்தார்.  அப்போது மாணவர்கள் கழிப்பறை, வகுப்பறைகளுக்கு தேவையான மேசை நாற்காலிகள், கணினிகள் தேவை என கோரிக்கை விடுத்தனர். கழிப்பறை கட்டுவ தற்கும், பேருந்து நிழற்குடை அமைப்ப தற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்ப டும் என துரை.ரவிக்குமார் உறுதி அளித்தார். மேலும் மேசை நாற்காலிகள், கல்லூ ரிக்கு கூடுதல் கட்டடம், மதில்சுவர் கட்டுவ தற்கும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பேராசிரியர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் கூறினார். 

;