வேலூர், ஜூன் 28- வேலூர் வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு காவல்துறை யினர் நடத்திய சோதனை யில் ஒன்றரை லட்ச ரூபாய் சிக்கியது. வேலூர் சத்துவாச்சாரி யில் வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வரு கிறது. இங்கு தினமும் ஓட்டு னர் உரிமம், வாகன உரிமம் பெறுவதற்கும், வாகனங்கள் புதுப்பித்தல், ஓட்டுனர் உரி மம் புதுப்பித்தல், வாகன உரிமையாளர்களின் பெயர் மாற்றம் செய்வதற்கு என நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். அப்போது அவர்களுக்கு உடனடியாக பணியை முடித்துக்கொடுப்பதற்கு புரோக்கர்கள் மூலம், அதி காரிகளுக்கு லஞ்சம் பெற்றுக் கொடுப்பதாக புகார்கள் வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். போக்குவரத்து அலுவ லர் ராமகிருஷ்ணன் அறை உட்பட அங்குள்ள அனைத்து பிரிவு அலுவலக அறைகளி லும், கழிவறை, படிக்கட்டு கள் என அனைத்து பகுதிகளி லும் சோதனை நடத்தினர். அப்போது கழிவறை, படிக்கட்டுக்கு அடிப்பகுதி, ஆவணங்கள் வைப்பறை, அதிகாரிகளின் மேசை கள் ஆகியவற்றில் கட்டுக் கட்டாக வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத 1 லட்சத்து 63 ஆயிரத்து 780 ரூபாய் இருந் தது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைப் பற்றி அதிகாரிகளிடம் விசா ரணை நடத்தி வருகின்றனர்.