ெண்களுக்கு பாது காப்பு இல்லா மாநி லம் என்று பெயர் எடுத்து வரும் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம். ஹர்தோய் பகுதியைச் சேர்ந்த மின் ரிக்சா ஓட்டுநரின் மனைவி கடந்த வாரம் துப்பாக்கி முனையில் 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத் காரம் செய்துவிட்டு, வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக வும் மிரட்டியுள்ளது. உயிருக்குப் பயந்து இந்த விவகாரத்தை அப் பெண் குடும்பத்தினர் யாரி டமும் கூறாமல் இருந்தனர். இந் நிலையில், பலாத்காரம் செய்யப் பட்ட வீடியோவை அக்கும்பல் சமூக வலைதளங்களில் லீக் செய்துள்ளது. இந்த விவகாரம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தெரி யவர புதனன்று அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற பொழுது கணவரால் காப்பாற்றப்பட்டு மாவட்ட மருத் துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளார்.
திசை திருப்பும் போலீசார்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய் துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்,”4 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து துப்பாக்கி முனை யில் பாலியல் பலாத்காரம் செய்த னர்” என வாக்குமூலம் அளித்துள் ளார். ஆனால் ஹர்தோய் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) கே.சி.கோஸ்வாமி,”எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருவ தாகவும், நிலத்தகராறு கோணத் தில் இந்த வழக்கை விசாரித்து வருகிறோம்” என்றும் சம்பந்த மில்லாமல் கூறியுள்ளார். பாலி யல் விவகாரத்தை நிலத்தகராறு விவகாரம் என திசை திருப்பும் நோக்கத்தில் உத்தரப்பிரதேச போலீசாரின் அறிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரி வித்துள்ளனர்.