காலை உணவு திட்டம் விரிவாக்கம்
ராணிப்பேட்டை நகராட்சி வி.ஆர்.வி அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் செவ்வாயன்று (ஆக.26) கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்கம் திட்ட நிகழ்ச்சியில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தலைமை தாங்கினார். உடன் ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கருணா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.