சென்னை,ஜூலை 9- மாநிலங்களவை தேர்தலில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. திமுக, அதிமுக, பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையின் 6 இடங்க ளுக்கு தமிழகத்தில் இருந்து புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய வரும் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதிமுக மற்றும் திமுகவுக்கு சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், இரு கட்சிகளும் தலா 3 பேரை அனுப்ப முடியும். அதிமுக சார்பில் சந்திரசேகரன், முஹம்மத் ஜான் வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் அன்புமணி ராம தாசும் வேட்புமனு தாக்கல் செய்தி ருந்தார். திமுக சார்பில் தொமுச பொதுச் செயலாளர் சண்முகமும், வழக்கறிஞர் வில்சனும் வேட்புமனு தாக்கல் செய்த னர். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடத்தில், வைகோ வேட்புமனு தாக்கல் செய்தார். அதே சமயம், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் வைகோ ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றுள்ள தால், அவரது வேட்புமனு ஏற்கப்படுமா என சந்தேகம் எழுந்தது. இதனால் மாற்று ஏற்பாடாக, திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ நான்காவ தாக வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை(ஜூலை 9) நடைபெற்றது. இதில் வைகோ, சண்முகம், வில்சன், என்.ஆர்.இளங்கோ, சந்திரசேகரன், முஹம்மத் ஜான், அன்புமணி ராமதாஸ் ஆகிய 7 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டன. 10 எம்எல்ஏக்கள் முன்மொழிந்து கையெழுத்திட்டிருந்தால் மட்டுமே வேட்புமனு ஏற்கப்படும் என்பதால், சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்த 4 பேரின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப் பெற வரும் 11ஆம் தேதி கடைசி நாள். திமுக சார்பில் நான்காவதாக வேட்புமனு தாக்கல் செய்த என்.ஆர்.இளங்கோ வேட்பு மனுவை திரும்பப் பெறுவார் என்பதால், மற்ற 6 பேரும் வேட்பா ளர் இறுதிப்பட்டியலில் இடம் பெறு வார்கள். போட்டி இல்லாத காரணத்தால் 6 பேரும் வெற்றி பெற்றதாக 11ஆம் தேதியே அறிவிக்கப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.