tamilnadu

சென்னையில் மழை 43 விழுக்காடு அதிகம்

சென்னை, டிச.16 - தமிழ்நாட்டிற்கு அதிக மழை பொழிவை கொடுப்பது வடகிழக்கு பருவமழையாகும். குறிப்பாக, இந்தியாவில் மழை பொழிவை தரும் காலங்கள் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ காலம்தான். இதில், தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை தென்மேற்கு பருவக் காலத்தில் குறைந்த அளவு மழையை மட்டுமே பெறும். மேற்குத்  தொடர்ச்சி மலையை ஒட்டிய கன்னியாகுமரி, தேனி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப் பூர், தென்காசி  உள்ளிட்ட சில மாவட்டங்க ளில் மட்டும் தென்மேற்குப் பருவ மழையால் கணிசமான மழை பெறுகிறது.

இந்த வருடம் தென்மேற்கு பருவமழை  கடந்த அக்டோபர் 23 ஆம் தேதியுடன் இந்திய  பகுதிகளில் இருந்து விலகிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த பருவமழை காலத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பைவிட 45  விழுக்காடு அதிகமாக மழை பதிவாகி யிருந்தது.

வடகிழக்கு பருவமழை பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் தொடங்கி டிசம்பர் வரை நீடிக்கும். தமிழ்நாட்டிற்கு அதிக மழைப் பொழிவை தருவது இந்த வடகிழக்கு பருவமழை தான்.

நடப்பாண்டில் இதுவரை சென்னையில் மட்டும் 43 விழுக்காடு கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அக்டோபர்.1 முதல் டிச.16 வரை இயல்பாக 759.6 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் 1088.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.