சென்னை, ஜூன் 19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாதவரம் - செங்குன்றம் பகுதிச் செயலாளர் கமலநாதன் தாயார் ராணி புதனன்று (ஜூன் 19) காலமானார். அவருக்கு வயது 70. பெருங்களத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரின் உடலுக்கு சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் செ.சுந்தரராஜன், தமிழ்நாடு வியாபாரி சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், மத்திய சென்னை நிர்வாகி தேவராஜ், மணிகண்டன் (வியாபாரிசங்க இளை ஞர்அணி), வி.ஆனந்தன், தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் மலரஞ்சலி செலுத்தி னர். பெருங்களத்தூரில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.