tamilnadu

img

கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிடுக!

கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிடுக!

ஒன்றிய அரசை வலியுறுத்தி படைப்பாளிகள் போராட்டம்

சென்னை, ஜூன் 12 - கீழடி அகழாய்வு அறிக்கையை உள்ளது உள்ளபடியே வெளியிட வலியுறுத்தி வியாழனன்று  (ஜூன் 12) சைதாப்பேட்டை யில் படைப்பாளிகள் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தி னர். கீழடி அகழாய்வின் தொன்மை காலத்தை குறைக்க முயற்சிக்கும் வேளையில் ஒன்றிய அரசின்  தொல்லியல் துறை ஈடுபட் டுள்ளது. அதற்கேற்ப அக ழாய்வு அறிக்கையை திருத்தி தருமாறு கோரி யதை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் நிராகரித் துவிட்டார். இந்நிலையில், ஆய்வா ளர் அமர்நாத் ராமகிருஷ் ணன் அளித்தபடி, அக ழாய்வு அறிக்கை உள்ளது உள்ளபடியே வெளியிட வேண்டும், அறிக்கையை திருத்த முயற்சிப்பதை கைவிட வேண்டும் என வலி யுறுத்தி தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் உள்ளிட்ட 9 அமைப்புகள் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியா ளர்களிடம் தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட் சண்யா கூறியதாவது: கீழடி நகர நாகரீகம் 2800 ஆண்டுகளுக்கு முந்தை யது என்று அகழாய்வு அறிக்கை கூறுகிறது. அதனை வெளியிடாமல், ஆய்வில் போதிய ஆதா ரங்கள், அறிவியல் பூர்வ மான அணுகுமுறை இல்லை என்று கலாச்சாரத் துறை அமைச்சர் கூறுகிறார். சங்பரிவார் நம்பும் விஷ யங்களுக்கு அரசு பணத்தை செலவிடுகிறார்கள். தமிழ் மொழியின்; இனத்தின் தொன்மையை கூறும் அறிக் கையை வெளியிட மறுக் கின்றனர். ஓடாத நதியை மான சீகமாக ஓடுவதாக கூறி,  சிந்து சமவெளி நாகரிகத்தை சிந்து-சரஸ்வதி நாகரிகம் என்று திரிக்கின்றனர். அடிப் படை ஆதாரமும் இன்றி  சரஸ்வதி நதியை கண்டு பிடிக்க பலநூறுகோடி ரூபாய் ஒதுக்குகிறார்கள். புராணங்கள், இதிகா சங்களை உண்மையென நிறுவ அரசு அதிகாரத்தை பயன்படுத்துகின்றனர். சங்க இலக்கியங்களில் கூறப்பட்டவை கீழடி அக ழாய்வில் கிடைத்துள்ளன. தங்கம், குதிரை எலும்பு போன்றவை கிடைத்துள் ளன. அவை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்ட பிறகும் தொல்லியல் துறை வெளி யிடாமல் உள்ளதை கண்டி க்கிறோம். தமுஎகச 5 மண்டலங்களில் இந்த  போராட்டத்தை நடத்து கிறது. இவ்வாறு அவர் கூறி னார். தமுஎகச துணைப் பொதுச் செயலாளர் பூபாளம் கா.பிரகதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பொரு ளாளர் சைதை ஜெ, கண பதி இளங்கோ (கலை இலக்கிய பெருமன்றம்), யாழன் ஆதி (விடுதலை கலை இலக்கியப் பேரவை), இரா. தமிழ்ச்செல்வன் (பகுத்தறிவாளர் கழகம்),  பேரா. இரா.காளீஸ்வரன் (மாற்று ஊடக மையம்), கார்த்திக் (இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம்), கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு  உள்ளிட்டோர் பேசினர். கவிஞர்கள் ரித்திகா, இரா.தனிக்கொடி, சி.எம்.குமார் ஆகியோர் கவிதை களை  வாசித்தனர்.