அம்பத்தூர், ஜூன் 24- ஆவடி பகுதியில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் சேக்காடு ஏரி ஒரு சொட்டு தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. இதனை தூர்வாரி ஆழப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சிய மாக உள்ளனர் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆவடியை அடுத்த சேக்காடு ஏரி 560 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் மூலம் அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வந்தனர். பின்னர், நாளடைவில் இந்த ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டது. இதனால் ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. இதன் காரணமாக, விவசாயத் தொழில் படிப்படியாக நலி வடைந்தது. தற்போது 500 ஏக்கர் ஏரியில் 200 ஏக்கர் ஆக்கிர மிக்கப்பட்டு 360 ஏக்கர் பரப்பளவு மட்டுமே மிஞ்சியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக சேக்காடு ஏரிக்குள் திருமண மண்டபம், வீடுகளில் உள்ள கழிவுநீர் இந்த ஏரியில் கலப்ப தால் ஏரி மாசடைந்து வருகிறது.
இதனால் ஏரி நீரை குடிநீருக்கோ, விவசாயத்திற்கோ முழுமையாக, பயன்படுத்த முடியவில்லை. தற்போது வேறு வழியின்றி ஏரியை நம்பி சுமார் நூறு ஏக்கர் விவசாய நிலம் மட்டும் பயனடைந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த 3 ஆண்டாக சரியானமழை இல்லாத தால், தற்போது ஏரி முற்றிலுமாக வறண்டு போய் வெடித்துக் காணப்படுகிறது. இதனால், ஏரியை சுற்றி உள்ள வீடுகளின் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஏரியின் கரைகளை ஆழப்படுத்த தமிழக அரசு சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ. 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக பணிகளை செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் கடந்த 20 ஆண்டு களுக்கு முன்பு ஏரிக்கு வரும் முக்கிய நீர்வரத்து கால்வாய் இங்குள்ள அண்ணாநகர் பகுதியில் 100 அடி அகலத்திற்கு இருந்தது. தற்போது அந்தக் கால்வாய் கடந்த சில ஆண்டாக படிப்படியாக ஆக்கிர மிக்கப்பட்டு பல இடங்களில் காணா மல் போயுள்ளது.
மேலும் அந்தக் கால்வாய் ஒரு சில இடங்களில் சிறு ஓடை போல் காட்சியளிக்கிறது. இதனால் ஏரிக்கு வரும் நீர்வரத்து அடியோடு முடங்கி யுள்ளது. இதனால் தற்போது ஏரியில் ஒரு சொட்டு நீர் இல்லாமல் வானம் பார்த்த பூமி போல் காட்சி அளிக்கிறது. இந்த ஏரியை தூர்வாறி ஆழப்படுத்தினால் வரும் காலங்களில் நிலத்தடி நீர் அதாரம் பெருகும். மேலும், ஏரியை சுற்றுலாத்தளமாக மாற்றினால் அரசுக்கு வருவாயும் கிடைக்கும். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலமுறை மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் அனுப்பியும், இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருக்கின்றனர். கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவும் நிலை யில் அதிகாரிகள் இனியும் காலம்தாழ்த்தாமல் ஆவடி சேக்காடு ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தி நீர் ஆதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவடி தொகுதி செயலாளர் ஆர்.ராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.