வேலூர், ஜூலை 2- அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் அருண் பாபுவிடம் 100 நாள் வேலை திட்டத்தில் புதிய வேலை அட்டை வழங்கக் கோரி மாவட்டச் செயலாளர் பி.ரகுபதி, மாவட்டத் தலைவர் வ.அருள் சீனிவாசன் ஆகியோர் மனு அளித்தனர். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் மூலம் கடந்த 26.6.2019 அன்று திமிரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புதிய வேலை அட்டை வழங்கக் கோரி 154 மனுக்கள் வழங்கப்பட்டது. ஆனால் மனுவின் மீது இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேத முத்துவும், திமிரி வட்டார கணியனூர் ஊராட்சி செயலாளரும் ஒரு குடும்பத்திற்கு ஒரு வருக்கு மட்டும்தான் அட்டை வழங்க முடி யும் மற்றொருவருக்கு வழங்க முடியாது என்று மறுத்துள்ளனர். மேலும் கடந்த 26ஆம் தேதி மனு அளிக்கச் சென்ற விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகிகளிடமும் வேலை கேட்ட தொழிலாளர்களிடமும் நீங் கள் எப்படி புதிய வேலை அட்டை பெறு வீர்கள் என கேட்டு மிரட்டியுள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், விண்ணப்பித்த அனைவருக்கும் வேலை அட்டை வழங்க வேண்டும், மேலும் சமூக தணிக்கையின்போது அபராதம் கட்டி யவர்களையும், வேலையே செய்யாதவர்க ளையும் மீண்டும் பணிக்கு எடுக்கக் கூடாது, 100 நாள் வேலை திட்டத்தில் 75 பேருக்கு வேலை வழங்க வேண்டும் என அந்த மனு வில் வலியுறுத்தப்பட்டிருந்தன.