திருத்தணி, நவ. 22 - திருத்தணி அடுத்த ஆர்.கே பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சந்தான வேணுகோபால புரத்தில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மிக அருகாமையில் ஜியோ நிறு வனம் சார்பில் செல்போன் உயர் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. குடியிருப்பு, பள்ளிக்கு அரு கிலேயே செல்போன் கோபுரம் அமைப்பதால் குழந்தைக ளுக்கு கதிர்வீச்சு தாக்கும் அபா யம் ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, கோபுரம் அமைப்பதை தடுக்க வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் அந்த பகு தியை பார்வையிட்டு செல் போன் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்த உத்தரவிட்டதாக தெரிகிறது. இருப்பினும், கோபுரம் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. பொது மக்கள் நலன் கருதி டவர் அமைப்பதை அரசு நிர்வாகம் தடுக்குமா?