விழுப்புரம் மாவட்டம், கோலிய னூர் ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளி களுக்கு 100 நாள் வேலை வழங்க மறுக்கப்பட்டதை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் வேலை வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நல சங்கத்தின் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் ஒன்றியத் தலைவர் மும்மூர்த்தி தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் ஜி. ஜெயக்குமார், நிர்வாகிகள் எம். முத்துவேல், மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.