சென்னை,பிப்.8- தமிழ்நாட்டில் மிக்ஜம் புயலால் டிசம்பர் 4ஆம் தேதி ஒரே நாளில் அதிதீவிர கனமழை பெய்தது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பெய்த மிகத் தீவிர மழை 4 மாவட்டங்களை யும் புரட்டிப் போட்டு விட்டது. இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். பொதுமக்கள் பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப 10 நாட்களுக்கு மேல் ஆனது.
இதையடுத்து வெள்ள பாதிப்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் தமிழ் நாடு வெள்ள பாதிப்பை பார்வை யிட ஒன்றிய குழுவும் சென்னை மற்றும் தூத்துக்குடி வந்தது. இதையடுத்து ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோர் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.
அப்போது தமிழ்நாடு அரசு சார்பாக புயல் மற்றும் வெள்ள பாதிப்பு சேதங் களை சரி செய்ய ஒன்றிய அரசி டம் ரூ.37,000 கோடி கோரியது. பிரதமர் மோடியை முதலமைச் சர் மு.க.ஸ்டாலின், அனைத்து கட்சி எம்.பி.க்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்தினர். இருந்த போதும் ஒன்றிய அரசு உரிய நிதி வழங்க வில்லை என தமிழ்நாடு அரசு தொடர்ந்து விமர்சித்து வருகிறது.
மேலும் மக்களவையிலும் ஒன்றிய அரசுக்கு எதிரான குற்றச் சாட்டை பதிவு செய்தது. மாநில அரசை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கேரள அரசு சார்பாக போராட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிப்.9 அன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் கலந்து கொண்டன. அல்வா வழங்கிய திமுக இந்த நிலையில், ஒன்றிய அரசின் செயல்பாட்டை மக்களுக்கு எடுத் துரைக்கும் வகையில் திமுக சார்பாக அல்வா கொடுக்கும் நூதன போராட்டம் தொடங்கியது.
திருநெல் வேலி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்க ளுக்கு திமுகவினர் அல்வா கொடுத்தனர். அல்வாவோடு இணைக்கப்பட்ட நோட்டீசில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு வழங் கிய நிதி என அச்சடித்து அதில் ஒரு அல்வா துண்டை இணைந்து வழங்கி வருகின்றனர்.