5 நாட்களாக கடலுக்குச் செல்லாமல் மீனவர்கள் போராட்டம்
திருப்போரூர்,பிப்.25- கோவளத்தில் மத்திய அரசு சார்பில் அமைய உள்ள புளூ பீச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் 5 ஆவது நாளாக கடலுக்குச் செல்லா மல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், கோவளத்தில் 700க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் உள்ளன. இவர்கள் கோவளம் பகுதியில் உள்ள கடலில் மீன் பிடித்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். கோவளம் கடற்கரை தற்போது சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக விளங்கிவரு கின்றது. கடந்த ஆண்டு மாமல்ல புரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலை யில், மத்திய அரசு சார்பில் கோவளம் கடற்கரையை புளூ பீச்சாக மாற்றுவ தற்கான பணிகள் துவங்கப்பட்டுள் ளன.
இதற்காக கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி செங்கல்பட்டு கோட்டாட்சியர் தலைமையில் மீனவ மக்களிடம் இத்திட்டம் குறித்து கூறப்பட்டுள்ளது. அப்போது மீனவமக்கள் இந்த திட்டத்தால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் எனக் கூறி எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். இந்நிலையில் புளூ பீச் அமையும் பகுதியில் பெரிய வலை கொண்டு மீன் பிடிக்க மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே பெரிய வலையின் மூலம் மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும், புளூ பீச் திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மீனவர்கள் கடந்த 5 நாட்களாகக் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கோவளம் மீனவப் பகுதியை சார்ந்த சந்தானம் கூறிய தாவது:-
1968 ஆம் ஆண்டு மீன்வளத் துறை துணை இயக்குநர் சென்னை மண்டலம் தலைமையில் கஞ்சித் தொட்டி பாடு, துறைமுக பாடு, துறை பாடு, பெரிய பாடு ஆகியவற்றை எங்களுக்கு உரியது என ஆவணங் களை வழங்கினர். தற்போது திட்டம் அமைய விருக்கும் இடம் கஞ்சித் தொட்டி பாடு. இந்த கஞ்சித் தொட்டி பாடு கிராமத்தில் யாராவது இறந்தாலோ, அல்லது கிராமத்தில் நல்லது கொட்டது நடைபெறும் போது பொதுவான செலவினங்களுக்கு மீன் பிடிக்கும் இடம். மேலும் இந்த முகத்துவாரத்தில் மீன்கள் அதிகம் கிடைக்கும் இடமும் கூட. இந்த திட்டத்தைச் செயல்படுத்தினால் 700 மீனவக் குடும்பங்களின் வாழ்வாதா ரம் பாதிக்கப்படும். மோடி இங்கு வந்து சென்ற பிறகு இந்த திட்டம் இங்கு வருவதாகச் சொல்கின்றனர். மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டுமா? படித்த இளைஞர்கள் பலர் வேலை கிடைக்காமல் கடலை நம்பியே பிழைப்பை நடத்துகின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்திட வலியுறுத்தி மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மீனவர் ஜானகி ராமன் கூறுகை யில், எங்கள் பகுதிக்கு என 11 பாடுகள் இருந்தன. தற்போது 3 பாடுகள் மட்டுமே உள்ளன. கிராமத்தில் பல முதியவர்கள் உள்ளனர். அவர்களால் கடலுக்குச் சென்று மீன் பிடிக்க முடியாது. எனவே இவர்கள் பெரிய வலை மூலம் கரையிலிருந்து மீன் பிடித்து சமமாகப் பிரித்துக் கொள்வர். இது கிராம பெரியவர்களுக்கு ஓய்வூதியம் போன்றது. மேலும் இந்த முகத்துவாரத்தில் மீன்கள் குஞ்சி பொரிக்கும் இடம் .சிறிய மீன்களைப் பிடிக்கப் பெரிய மீன்கள் வரும். இது எங்களுக்கு எளிமையாக மீன் பிடிக்கும் இடமும் கூட. இந்த இடத்தில் புளு பீச் அமைத்தால் எங்களை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். எங்களின் வாழ்வாதாரத் தைப் பாதுகாக்க அரசு இந்த திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்திட வேண்டும்’ என்றார். இதுகுறித்து செங்கல்பட்டு கோட்டாட்சியர் செல்வம் கூறுகை யில், ‘புளூ பீச் அமைப்பதற்கான பணிகள் துவங்கிவிட்டது. அப்பகுதி யில் செய்யப்படும் பணிகளுக்கான திட்ட மதிப்பீடுகள் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது’ என்றார்.