tamilnadu

img

லால்புரம் ஊராட்சியை சிதம்பரம் நகராட்சியோடு இணைப்பதற்கு எதிர்ப்பு! கடலூரில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

லால்புரம் ஊராட்சியை சிதம்பரம்  நகராட்சியோடு இணைப்பதற்கு எதிர்ப்பு!  கடலூரில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர், ஏப். 21- சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் ஊராட்சியை சிதம்பரம் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள், அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் நகராட்சிக்கும் லால்புரம் ஊராட்சிக்கும் மற்ற ஊராட்சிகளை போல் இணைப்பு சாலைகள் இல்லை. லால்புரம் ஊராட்சிக்கும் சிதம்பரம் நகராட்சிக்கு இடையிலே 3 கிலோமீட்டர் தூரம் வீராணம் ஏரி பாசன பாசி முத்தான் ஓடை செல்கிறது. இதன் மூலமாக 140 ஏக்கரும்,  மேல சொக்கநாதன் பேட்டை 150 ஏக்கரும், பாலு தாங்கரை மூலமாக 140 ஏக்கர் மொத்தம் 400 ஏக்கருக்கு மேல் நெல் விளையும் பூமியாக உள்ளது. 6000க்கும் அதிகமான கால்நடைகள் உள்ள இந்த பகுதியை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் வி.எம்.சேகர் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினர் வி.சுப்பராயன், கட லூர் மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஜாகிர் உசேன், காளி கோவிந்தராஜ், சிபிஐ மாவட்டச் செயலாளர் துரை, துணைச் செயலாளர் வி.குளோப் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.