“கடந்த பத்தாண்டுகளாக நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தொழிலாளர் வர்க்கம் போராடி பெற்ற உரிமைகளைப் பறித்து வருகிறது.
நிரந்தர வேலை என்பதை ஒழித்துக் கட்டி நீம், எப்.டி.இ. போன்ற ஒப்பந்த கொத்தடிமை முறையை நிரந்தர மாக்குவது; தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களை சிதைப்பது; எட்டு மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்துவது என தொழிலாளர் வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் மோடி அரசின் புதிய தொழிலாளர் நல சட்டத் தொகுப்புகள் மூலம் சட்ட வடிவம் பெற்றுள்ளன.
இந்நிலையில் தான் 18-ஆவது மக்களவைத் தேர்தலில் தொழிலாளர் வர்க்கம் ஒன்றிய பாஜக அரசை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றுவதற்கு உறுதி கொண்டிருக்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் உரிமைப் பதாகையை உயர்த்திப் பிடிக்க மே நாளில் உறுதி ஏற்போம். அனைத்து தரப்பு தொழிலாளர் களுக்கும் மே தின நல்வாழ்த்துகள்.”
வைகோ, பொதுச்செயலாளர், மதிமுக