சென்னை, செப். 11 - பாளையங்கோட்டை சிறையில் உள்ள சங்கர், கோவை சிறையில் உள்ள வேலுமணி உள்ளிட்ட 10 ஆயுள் தண்டனை சிறைவாசிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
ஆயுள் தண்டனை சிறைவாசி களான தங்களை நன்னடத்தை அடிப் படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய முதலமைச்சர் அனுமதி வழங்கி அந்த முடிவு தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதாகவும், ஆனால் ஆளுநர் அதனை நிராகரித்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் ஆகி யோர் அடங்கிய அமர்வில் விசார ணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஆயுள் தண்ட னை சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக மாநில அளவிலான குழு பரிந்துரையின் அடிப்படையில், முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பின்பும், தகுந்த கார ணங்களைக் கூறாமல் தமிழக ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும்?” என கேள்வியெழுப்பி தங்களின் அதிருப்தி யை தெரிவித்தனர்.
அத்துடன், சிறைவாசிகளின் விடு தலை தொடர்பான இந்த கோப்பு களைத் தமிழக அரசு 8 வாரத்திற்குள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.