tamilnadu

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

அயோத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும், இந்தியா தமது தலைமையில் உலக அளவிலான அதிகார மையமாக உருவெடுத்துவிட்டது என்று முற்றிலும் தவறான, முற்றிலும் பொய்யான விசயத்தை பேசியுள்ளார். உண்மையில் நிலைமை நேர்மாறாக உள்ளது. கடந்த 13 மாத காலத்தில் இல்லாத அளவிற்கு முதன்மையான துறைகளில் வளர்ச்சி என்பது மோசமான அளவு சுருங்கியுள்ளது. 2023 மார்ச் மாதத்திலிருந்து கணக்கிடும்போது, 8 முதன்மை துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி தீவிரமடைந்துள்ளது. 2023 அக்டோபரில் 12 சதவீதமாக இருந்த 8 முதன்மை துறைகளின் வளர்ச்சி விகிதம் ஒரு மாதத்திலிலேயே- அதாவது நவம்பரில் 7.8 சதவீதமாக வீழ்ந்துள்ளது. உர உற்பத்தி கடந்த மூன்று மாதங்களில் வெறும் 3.4 சதவீதம் அளவிற்கு மட்டுமே இருந்துள்ளது. இயற்கை எரிவாயு, மின் உற்பத்தி துறைகளிலும் வீழ்ச்சி.