சென்னை, பிப். 22 - பிரதமர் நரேந்திர மோடி, பிப்ரவரி 27, 28 தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
பிப்ரவரி 27 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் வரும் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அண்ணாமலை யின் ‘என் மண்; என் மக்கள்’ யாத்திரையை முடித்து வைத்து, பாஜக பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
அன்று மாலை மதுரை சென்று பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளும் பிரதமர், இரவு மதுரை யிலேயே நட்சத்திர விடுதி யில் தங்குகிறார்.
மறுநாள் காலை தூத்துக் குடி மாவட்டம் செல்லும் பிர தமர், வ.உ.சி. துறைமுகத் தில் சில திட்டப்பணிகளைத் துவக்கி வைக்கிறார். குல சேகரன்பட்டினத்தில் இஸ் ரோ சார்பில் அமைக்கப் படவுள்ள ராக்கெட் ஏவுதளத் திற்கு அடிக்கல் நாட்டும் அவர், இராமேஸ்வரம் புதிய பாம்பன் ரயில்வே பாலத்தை யும் திறந்து வைக்கிறார்.