tamilnadu

img

பசுக் குண்டர்களால் எரித்துக் கொல்லப்பட்ட ஜூனைத், நசீர் குடும்பத்தினருக்கு ஆறுதல், நிதியுதவி!

புதுதில்லி, பிப்.24- ஹரியானா மாநிலத்தில் பசுப் பாதுகாப்புக் குழு எனப்படும் கும்ப லால் உயிரோடு எரித்துக் கொல்லப் பட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜூனைத், நசீர் குடும்பத்தி னர் இல்லங்களுக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் சென்று ஆறுதல்  கூறினார்கள். அவர்களின் குடும்பத்தினர்க்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. ஹரியானா மாநிலத்தில் பிப்ர வரி 16 அன்று பஜ்ரங் தளம் இயக்கத் தைச் சேர்ந்த பசுப் பாதுகாப்புக்குழு எனும் கும்பல் ஜூனைத் மற்றும் நசீர்  என்பவர்களைக் கொடூரமான முறை யில் துன்புறுத்தி, காரில் ஏற்றி, காரு டன் உயிரோடு எரித்துக் கொலை செய்துள்ளனர். அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில  இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் விஜூகிருஷ்ணன், கிருஷ்ணபிரசாத், இந்தர்ஜித் சிங், சஞ்சய் மாதவ், சத்பீர் சிங், விக்ரம் சிங், சுபோஜித் தே, கலிகான் சர்பாஞ்ச், அக்தர் உசேன் ஆகியோர்  கொலையுண்ட ஜூனைத், நசீர்  இல்லங்களுக்கு சென்று அவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினர். கொலைகளைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, குறிப்பாக, மோனு மானேசர் என்பவனுக்கு எதிராகவும் அவன்  கும்பலுக்கு எதிராகவும் விசாரணை நடத்தி தண்டனை கிடைக்கும்வரை  சட்டரீதியாகவும், அரசியல்ரீதியாக வும் போராடுவதற்கு உறுதி அளித்த னர். மேலும் முதல் கட்டமாக அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலை வர்கள், பலியான ஜூனைத், நசீர் ஆகி யோரின் மனைவி சஜிதா, பரிமினா ஆகியோரிடம் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை அளித்தனர்.

இறந்த  இருவருமே மிகவும் ஏழை  விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த வர்களாவர். பசுவைக் கடத்துகிறார்கள் என்று பொய்யாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, முஸ்லீம் இளைஞர்கள் மேவாத் பிராந்தியத்தில் இந்துத்துவா வெறி யர்களால் தொடர்ந்து கொல்லப் பட்டு வருகிறார்கள். எதார்த்தத்தில் இங்கே வாழும் முஸ்லீம்கள் மிகச்  சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயி கள். தங்கள் வாழ்வாதாரங்களுக் காக பால் வியாபாரம் செய்து வருபவர் கள். இந்த வழக்கில் பாதிக்கப் பட்டு கொலையுண்டுள்ள  இரு வருமே ஹரியானாவில் உள்ள தங் கள் உறவினர்களின் இல்ல விழா  ஒன்றிற்குச் சென்றுவிட்டுத் திரும்பி யவர்கள். இவர்கள் பசுப்பாதுகாப்பு குழு வெறியர்களால் கடத்தப்பட்டு, காரில் ஏற்றி, உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஹரியானா காவல்துறை, பாதிக்கப்பட்டு தங்களிடம் அழைத்து வரப்பட்டவர்களை எடுத்துக் கொண்டு, முதல் தகவல்  அறிக்கை பதிவு செய்து, மருத்துவமனைக்கு அனுப்புவதற்குப் பதிலாக, பசுப் பாது காப்புக்குழுவினரிடமே ஒப்படைத்திருக்கிறது. இதில்  சம்பந்தப்பட்டுள்ள குற்றஞ்சாட்டப் பட்டவர்களில் சிலர் காவல்துறை யினரின் தகவலாளர்கள் (infor mers) என்பது இப்போது தெரிய  வந்திருக்கிறது. மேவாட் பிராந்தி யத்தில் மோனு மனேசர் போன்ற  சமூக விரோத சக்திகள் காவல்துறை யினரின் பாதுகாப்புடன் முழுமை யாகச் செயல்பட்டுக்கொண்டிருப் பது இதிலிருந்து நன்கு தெரிகிறது.

கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்தபின், தூதுக்குழுவினர் கொலை சம்பவத் திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத் தில் நடைபெற்ற தர்ணா போராட்டத் தில் கலந்துகொண்டனர். இறந்த வர்கள் குடும்பத்தினர் ஒவ்வொன்றுக் கும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு அளித்திட வேண்டும் என்று கோரி னார்கள். குற்றம்புரிந்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்கள், தவறிழைத்த ஹரியானா காவல் துறையினருக்கு எதிராக நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று  வலியுறுத்தினார்கள், பசுப்பாது காப்புக்குழு தடை செய்யப்படவேண் டும் என்றும் வலியுறுத்தினார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக வாயே திறக்காது இருக்கும் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கும் கண்டனம்  தெரிவித்தனர். (ந.நி.)