tamilnadu

img

கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளது. தமிழ்நாட்டில் தமிழ்நாட்டில் 221 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கர்ப்பிணிகள், உடல்வலி, காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்; நெருக்கமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.