tamilnadu

img

திறனறித் தேர்வில் மாணவர்கள் வெற்றி பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு

திறனறித் தேர்வில் மாணவர்கள் வெற்றி  

பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி, ஜூன் 25- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வில் மாணவிகளுக்கு சிறப்பாக பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு அரசின் சார்பில் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வழங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருங்கி ணைந்த பள்ளி கல்வித்துறையின் கீழ் இடைநின்ற மாணவர்களுக்காக கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி யில் 8ஆம் வகுப்பு பயிலும் மாண வர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்று 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி  களில் பயின்றால் மாதந்தோறும் ரூ. 1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். 2024-25 ஆம் கல்வி ஆண்டில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளி களில் பயின்ற 9 மாணவிகள் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். மாணவிகளுக்கு சிறப்பாக பயிற்சி அளித்து தேர்ச்சி அடைய செய்த ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகை யில் 13 ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தலா ரூ.5,000 காசோலை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கி ஊக்குவித்தார்.