சென்னை, மார்ச் 12- உலகக் கோப்பை செஸ் போட்டி யில் இரண்டாம் இடம் பெற்ற பிரக்ஞா னந்தாவின் பெற்றோருக்கு மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா எலெ க்ட்ரிக் காரை பரிசாக அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அஜர் பைஜான் நாட்டில் உள்ள பாகு நகரில் நடைபெற்ற உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரர் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதி ராக விளையாடிய பிரக்ஞானந்தா 2-ம் இடம் பிடித்தார். இதையடுத்து அவ ருக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.
உலகக் கோப்பை செஸ் போட்டி யில் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இறுதிச்சுற்று வரை வந்த முதல் இந்தி யர், இந்தப் போட்டியின் வரலாற்றில் இறுதிச்சுற்றுக்கு வந்த இளம் போட்டி யாளர் (18) என்ற பெருமையை பிரக் ஞானந்தா பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, பிரக்ஞானந் தாவுக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரி வித்த ஆனந்த் மஹிந்திரா, “தங்கள் குழந்தைகளை செஸ் விளையாட்டில் அறிமுகப்படுத்தி இந்த அளவுக்கு ஊக்குவித்து அவர்களுக்கு உறு துணையாக இருந்து வரும் பெற் றோரை ஊக்குவிக்க விரும்புகிறேன். பிரக்ஞானந்தாவின் பெற்றோர் நாக லட்சுமி – ரமேஷ் பாபுவிற்கு எக்ஸ்யூவி 400 என்ற மின் வாகனத்தை பரிசாக அளிக்க உள்ளேன்.” என்று தெரிவித் திருந்தார்.
இந்த நிலையில், எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரின் சாவி பிரக்ஞானந் தாவின் பெற்றோரிடம் செவ்வாயன்று (மார்ச் 12) வழங்கப்பட்டது. இது தொடர் பான புகைப்படங்களை பிரக்ஞானந்தா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு ஆனந்த் மஹிந்திராவுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.