பல்லாவரம், அடையாறு, போரூரில்இன்று மின்சாரம் நிறுத்தம்
சென்னை, ஜூன் 12- மின் பராமரிப்பு காரண மாக வியாழன்னறு (ஜூன்.13) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பல்லா வரம் தர்காரோடு, அனகா புத்தூர், கட்டபொம்மன் நகர், ஜமீன் ராய்பேட்டை, பாரதி நகர் பகுதி. அடை யார் 4-வது மெயின் ரோடு, கைலாஷ், கஸ்தூரி பாய் நகர் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படு கிறது. ஆவடி, திருமுல்லை வாயல், சோளிங்கநல்லூர், பெரும்பாக்கம், பள்ளிக் கரணை, கோவிலம்பாக்கம், சித்தாலபாக்கம் மற்றும் போரூர் திருமுடிவாக்கம், மாங்காடு, குன்றத்தூர், கெருகம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படு கிறது.
தாம்பரம் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் காலை 11 மணிக்கு மேற்கு தாம்ப ரம் முல்லைநகரில் நடக்கி றது. இதில் பொது மக்கள் கலந்து கொண்டு குறை களை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.
செங்கல்பட்டில் ஜூன் 18ல் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்
செங்கல்பட்டு, ஜூன் 12- விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாக அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டம், ஆயுஷ் மான் பாரத் அட்டை ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதற்காக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் வரும் 18 ஆம்தேதி சிறப்பு முகாமில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கையரும் பங்கேற்கும்படி மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.