மேட்டூர் அனல் மின் நிலையத்தில், மின் உற்பத்தி நிறுத்தம்
மேட்டூர், ஜூன் 4- மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 810 மெகவாட் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப் பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட நான்கு அலகுகளும், 2 ஆவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகும் செயல்பட்டு வருகி றது. இவற்றின் மூலம் 1440 மெகாவாட் மின்சா ரம் உற்பத்தி செய்ய முடியும். தற்போது காற் றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், மேட்டூர் அனல் மின் நிலையத்தில், 2 ஆவது பிரிவில் 600 மெகாவாட் மின் உற்பத்தி முழு மையாக நிறுத்தப்பட்டது. முதல் பிரிவில் 4 ஆவது அலகில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மின் தேவை அதிகரித்தால், மீண்டும் நிறுத்தப்பட்ட அலகு களில், மின் உற்பத்தி துவக்கப்படும் என அனல் மின் நிலைய பொறியாளர்கள் தெரி வித்துள்ளனர். தற்போது முதல் பிரிவில் உள்ள 3 அலகுகளில் 630 மெகாவாட் மின்சா ரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
பேருந்து நிலையத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்
சேலம், ஜூன் 4- சேலம் மாநகரில் கனமழை பெய்த நிலை யில், புதிய பேருந்து நிலையத்தில் குளம் போல தேங்கிய நின்ற மழைநீரால் பயணி கள் அவதிக்குள்ளாகினர்.
சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில், சேலம் நான்கு சாலை, புதிய பேருந்து நிலை யம், செவ்வாய்ப்பேட்டை, அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி,கொண்டலாம்பட்டி வின் சென்ட், ஐந்துசாலை உள்ளிட்ட பகுதிகளில் திங்களன்று இரவு கனமழை பெய்தது. சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்த இந்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். ஆங்காங்கே மழைநீருடன் சாக்கடை கழிவுநீரும் கலந்துள் ளதாக புகார் எழுந்தது. குறிப்பாக, சேலம் புதிய பேருந்து நிலையத்தில் தெப்பக் குளம்போல தேங்கி நின்ற மழைநீரால், பேருந்துக்காக காத்திருந்த பயணிகள், வெளியூர்களில் இருந்து பேருந்துகளில் வந்த பயணிகள் பரிதவித்தனர். ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசி வருவதுவடன் சுகாதாரக் கேடும் ஏற்பட்டுள் ளது. கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, குழந்தைகள், பெரியவர்களுக்கு தொற்று நோய் பரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மழைநீருடன் கலந்துள்ள கழிவு நீரை அப்புறப்படுத்த வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அணைகள் நிலவரம்
அமராவதி அணை
நீர்மட்டம்: 44.92/90அடி
நீர்வரத்து: 326 கனஅடி
மழையளவு
வால்பாறை: 12 மி.மீ.
அப்பர் நீராறு: 6 மி.மீ.
முட்டை விலையில் மாற்றமில்லை
நாமக்கல், ஜுன்-4 நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.35 ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.35 ஆக நிர்ணயம் செய்ய தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு வின் மண்டல ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடை பெற்றது. இதில், முட்டை விலை நிலவரம் குறித்து பண்ணை யாளா்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன. மற்ற மண்ட லங்களில் விலையில் மாற்றம் இல்லாததால், இங்கும் மாற்றம் வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மாற்றமின்றி ரூ. 5.35-ஆக ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 140-ஆகவும், முட் டைக் கோழி விலை கிலோ ரூ. 98-ஆகவும் நிா்ணயிக்கப்பட் டது.