tamilnadu

img

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் வாக்கு

சென்னை,மார்ச் 19- நடைபெறவுள்ள மக்களவைப் பொதுத் தேர்தலை முன்னிட்டு,சென்னை மாவட் டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்குமேற்பட்ட முதியவர்கள் தபால் வாக்கு செலுத்த விரும்பினால் மார்ச் 25ஆம் தேதிக்குள்படிவம் 12டியை பூர்த்தி செய்து வழங்கவேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 3  மக்களவைத் தொகுதிகளில் உள்ளடங் கிய 16 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள மாற்று த்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிப்பதில்ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் பொருட்டு, அஞ்சல் வழியில் வாக்களிக்கஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.   தேர்தலில் மாற்றுத்திறனாளி வாக்கா ளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களின் விருப்பத்தை பெறுவதற்கு வசதியாக அவர்களது இல்லங்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் படிவம் 12டி மற்றும் வாக்காளர் பட்டியலுடன்நேரில் வருகை தருவார்கள்.

அவ்வாறு தங்களது இல்லங்களுக்கு வருகை தரும் போது உரிய படிவத்தில் தங்களது விருப்பத்தை படித்து பார்த்தோ அல்லது படிக்க கேட்டோ, ஆதாரங்கள் ஏதும் கோரும் பட்சத்தில் அதன் நகலை சமர்ப்பித்து, ஒப்பம் செய்து தங்களது ஒத்துழைப்பை மாவட்ட நிர்வா கத்திற்கு வழங்கலாம்.

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்ட மன்றத் தொகுதிகளுக்கு 22.01.2024அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டி யலின்படி, மொத்தம்வாக்காளர்களின் எண்ணிக்கை 39,01,167 ஆகும். மேற்கண்ட மொத்தவாக்காளர்களில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள்  11,369 நபர்களும், 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 63,751 நபர்களும் உள்ளதாக தெரிய வருகிறது. தேர்தலை சுமூகமாகவும், நேர்மையாக வும் நடத்திட உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேலும், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் அஞ்சல் வழியில் வாக்க ளிப்பது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் புகார்கள் இருக்கும் பட்சத்தில் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் 24மணிநேரமும் செயல்படும் இலவச தொலைபேசி எண்கள் 1950 மற்றும் 1800 425  7012ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம் என ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.