சென்னை,டிச.22- தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் க. பொன்முடி. திமுக மூத்த தலைவரான இவர் கட்சியின் துணைப் பொதுச்செயலா ளராகவும் உள்ளார்.
இதனிடையே, 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சி காலத்தில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது வரு மானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த தாக பொன்முடி அவரது மனைவி மீது அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப் ்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருவருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. இதனை தொடர்ந்து பொன்முடி அமைச்சர் பதவியை இழந்தார். இந்நிலையில், பொன்முடி வெள்ளிக்கிழமை (டிச.22) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவ ரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்தார். அப்போது, வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்களை முடக்க வேண்டியதில்லை
இதே வழக்கு விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தபோது பொன்முடி விடுதலை செய்யப்பட்டதோடு, அவரின் சொத்துக்களை முடக்கப் படாமல் விடுவிக்கப்பட்டது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில்தான் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதே விவகாரத்தில் கீழமை நீதி மன்றம் பொன்முடியின் சொத்துக் களை விடுவித்ததை ரத்து செய்த தோடு அவரின் சொத்துக்களை மீண்டும் முடக்க வேண்டும் என 2017 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தான் தற்போது உத்த ரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த அந்த உத்தரவில், “சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சொத்துக்களை மீண்டும் முடக்க வேண்டியது தேவை யற்றது. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு தவறாக இருந்தாலும் அதனை தற்போது மாற்ற முடியாது. தேவைப் பட்டால் சட்டத்துக்கு உட்பட்டு நட வடிக்கை மேற்கொள்ள லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்றார்.