tamilnadu

img

சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த பொங்கல் பண்டிகை ரயில் முன்பதிவு டிக்கெட்

சென்னை:
பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்வதற்கான ரயில் முன்பதிவு டிக்கெட்கள் சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தன.  தீபாவளி,பொங்கல் பண்டிகைககளின் போது  சென்னை  மற்றும் பிற மாவட்டங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால் ரயில்கள், பேருந்து களில் பயணிகள் கூட்டம் அலை மோதும்.  ஜனவரி 10 ஆம் தேதி பயணிப்பதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு  செப்டம்பர் 12 அன்று துவங்கியது. இதனால், எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பொதுமக்கள் காத்திருந்து முன் பதிவு செய்தனர்.  காலை  8 மணிக்கு முன் பதிவு துவங்கியதும், ஆர்வத்துடன் பயணிகள் டிக்கெட்டுகளை புக்கிங் செய்ய துவங்கினர். ஆனால்,சில நிமிடங்களிலேயே தென் மாவட்டங் களுக்கு செல்லும் முக்கிய ரயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். 

ஜனவரி 11 ஆம்தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜனவரி 12 ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர்14 ஆம் தேதியும், ஜனவரி 13 ஆம் தேதி (திங்கட்கிழமை) முன்பதிவு செப்டம்பர் 15 ஆம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். பொங்கலுக்கு முந்தைய நாள் ஜனவரி 14 ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 16 ஆம் தேதி தொடங்கும்.அதேபோன்று சொந்த ஊரில் இருந்து திரும்பும் போது, ஜனவரி 17-ம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 19ம் தேதியும், ஜனவரி18ம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 20 ஆம்தேதியும், ஜனவரி 19ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) முன்பதிவு செப்டம்பர் 21 ஆம் தேதியும் தொடங்கும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.

;