tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: காவல்துறை

விழுப்புரம்,மார்ச் 1- குழந்தைகளைக் கடத்த முயற்சிப்பது போன்ற போலி யான காணொலிகள் சமூக வலைத்தளங்க ளில் வேமாக பரவி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் திரு நங்கையை மின்கம்பத்தில் கட்டி வைத்து மானபங்கப்படுத்தியதாக வெளியான போலிவீடியோ  அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து அண்மை யில் திருவெற்றியூரில் குழந்தையை  கடத்த வந்ததாகக் கூறி வட மாநில இளைஞரை பொதுமக்கள் தாக்கி, காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவமும் அரங்கேறி உள்ளது. இதையடுத்து, குழந்தை கடத்தப்படு வதாக வதந்தியை பரப்பினால் கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

வழிபறியில் ஈடுபட்ட நபரின் கால் உடைந்தது

கடலூர், மார்ச்.1- தொடர் வழிபறியில் ஈடுபட்ட நபரை கைது செய்யமுற்பட்டபோது கீழே விழுந்து கால் உடைந்ததாக கூறப்படுகிறது. 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி லிங்க்ரோட்டில் அரிசி கடை வைத்திருப்பவர் ராஜேந்திரன். இவரது மனைவி யசோதா (65). மதியம் வேளையில் கடையில் தனியாக இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென கடைக்குள் புகுந்து யசோதாவை கத்தியை காட்டி மிரட்டினார். மேலும் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ5 ஆயிரத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

பின்னர் இது குறித்து யசோதா கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் விரைந்து வந்து திருட்டு நடந்த கடையை பார்வையிட்டு அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். விசாரணையில் யசோதாவை கத்தியை காட்டி மிரட்டி பணத்தை திருடிய வாலிபர், பண்ருட்டி திருவதிகை குட்டை தெருவை சேர்ந்த அப்பு (எ) அய்யனார்(29) என்பது தெரியவந்தது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி என பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்று செயின் பறிப்பு மற்றும் கத்தியைகாட்டி மிரட்டுவது என 22 வழக்குகளில் தொடர்புடைய அப்புவை போலீசார் பிடிக்க திருவதிகை சென்றனர். போலீசார் வருவதை அறிந்த அய்யனார் இரண்டு சக்கர வாகனத்தில் தப்ப முயன்றபோது சாலையோர தடுப்பில் மோதி கால் எலும்பு முறிந்ததாக காவல்துறையினர் கூறினர். கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை நீதிபதி மருத்துவமனைக்கு வந்து பார்த்து  15 நாள் நீதிமன்ற காவல் வழங்கினார்.

தேர்தல் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் அழைப்பு  

திருவண்ணாமலை,மார்ச்.1- எதிர்வரும் நாடாளுமன்றத் தோதல்-2024ல் முன்னாள் படை வீரர்களை சிறப்புக் காவலர்களாக அரசு ஈடுபடுத்த உள்ளது. எனவே, இப்பணிக்குச் செல்ல விருப்பமும், உடல் திடகாத்திரமும் உள்ள முன்னாள் படைவீரர்கள் அனைவரும் உடனடியாக தங்களது பெயரினை அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை யுடன் திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பதிவு செய்து கொள்ளு மாறு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநரை அவர்களை நேரிலோ (அ) தொலைபேசி வாயிலாகவோ (04175 - 233047) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்  கொள்ளப்படுகிறது.

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை, மார்ச் 1- சென்னையை அடுத்த மாங்காடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பள்ளி அலுவலக இ-மெயிலுக்கு வந்த வெடிகுண்டுமிரட்டலால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சோதனையிட்டனர். பின்னர் மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.