tamilnadu

img

பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறைக்கு கண்டனம்

பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை  எடுக்காத காவல்துறைக்கு கண்டனம் 

தேன்கனிக்கோட்டையில் மாதர்சங்கம் போராட்டம்

கிருஷ்ணகிரி, ஜூன் 14 -   கெலமங்கலம் ஒன்றியத்தில் கடந்த மூன்று மாதங்களில் 5 சிறுமிகள் பாலி யல் வன்முறைக்கு ஆளாகி தேன்கனிக்  கோட்டை, ஓசூர் அரசு மருத்துவமனை களிலும், கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூ ரியிலும் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர்.பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீது புகார் அளித்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. குழந்தை திருமணங்களையும் தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் இல்லை. ராயக்கோட்டை அருகே, திம்ஜேப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் மாற்றுத் திறனாளி வெங்கட்டப்பாவின் மனைவியை வனப்பகுதியில் சமூக விரோதிகள் பாலியல் வன்கொடுமை செய்து  கொலை செய்துள்ளனர்.சம்பவம் குறித்து காவல் துறை கொலை வழக்கு பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. சரியான நடவடிக்கைகள் எடுக்காத காவல் துறையை கண்டித்தும் கெலமங்கலம் ஒன்றியம், இருதுகோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட மணியம்பாடியில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சிறுமிக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க கோரியும்,அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க கெலமங்கலம்,தளி ஒன்றி யங்கள் சார்பில் தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதர் சங்க நிர்வாகி சுசிலா தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் சரஸ்வதி,  டி.எம்.ராதா, ராஜம்மாள், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நாகராஜ் ரெட்டி டி.எஸ்.பாண்டியன்,ராஜா, புருஷோத்தம ரெட்டி,ஆர்.நடராஜன், ஆர் சேகர் அனுமப்பா,இருதயராஜ்,ஆனந்தகுமார் கலந்து கொண்டனர்.காவியா நன்றி கூறினார்.