பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்குகின்றன
சென்னை, பிப்.29- தமிழ்நாடு, புதுச்சேரி யில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வெள்ளிக்கிழ மையன்று (மார்ச் 1) தொடங்குகிறது.
முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. தொடர்ந்து மார்ச் 22 வரை பல்வேறு பாடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை தமி ழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 மையங்களில் 7.25 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். 47 ஆயிரம் ஆசிரியர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படு கின்றனர்.
கீழடி அகழாய்வுப் பொருட்களை தமிழகத்திடம் ஒப்படைக்க உத்தரவு
மதுரை, பிப்.29- கீழடி அகழாய்வுப் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கீழடி அகழாய்வுப் பொருட்கள் தொடர் பாக 2016-ஆம் ஆண்டு வழக்கறிஞர் கனி மொழி மதி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு வியாழ னன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “கீழடி இரண்டாம் கட்ட அக ழாய்வு குறித்த அமர்நாத் ராமகிருஷ்ண னின் அறிக்கையை வெளியிட்ட பிறகு, அகழாய்வில் கிடைத்த 5,765 பொருட் களை தமிழ்நாடு அரசிடம் ஒன்றிய அரசு ஒப்படைக்க வேண்டும். ஒன்றிய அரசு ஒப்படைக்கும் அகழாய்வுப் பொருட் களை, பாதுகாக்க மாநில அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி யுள்ளனர்.
வறண்டு வரும் மேட்டூர்!
மேட்டூர், பிப்.29- மேட்டூர் அணையின் நீர் மட்டம் வியாழ னன்று காலை 64.05 அடியாக சரிந்துள் ளது. அணையின் நீர் இருப்பு 27.79 டிஎம்சி-யாக உள்ளது. குடிநீர் தேவை களுக்காக வினாடிக்கு 1000 கன அடி விகிதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருவ தால், நீர்மட்டம் குறைந்து அணை வறண்டு போகும் நிலையில் உள்ளது. கடந்த 19 நாள்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 2.47 அடி சரிந்துள்ளது. நீர் இருப்பு 12 நாட்களுக்கு 1 டி.எம்.சி அள விற்கு குறைந்து வருகிறது. இதேநிலை நீடிக்கும் பட்சத்தில் ஜூன் 12 அன்று மேட் டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாச னத்திற்கு தண்ணீர் திறப்பதே கேள்விக் குறியாக மாறும் அபாயம் உள்ளது.