tamilnadu

திட்டமிட்டபடி  நாளை பள்ளிகள் திறப்பு: அமைச்சர்

சென்னை, ஜூன் 1-தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை ஜூன் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின.இந்நிலையில், தமிழகத்தில் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப் படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், “மாணவர்களின் நலனுக்கு ஏற்ப தமிழக அரசு புதிய பாடத்திட்டங்களை மாற்றி அமைத்துள் ளது” என்றார்.210 நாட்கள் வேலை நாட்களாக உள்ளது. எனவே, விடுமுறையை நீட்டிக்க வாய்ப்பில்லை. விடுமுறையை அதிகரிக்கும் பட்சத்தில் பாடத்தை முழுமையாக மாணவர்களிடத்தில் கொண்டு செல்ல முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

;