ப ாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் யாத்திரை ஒன்றை நடத்தி வருகிறார். இது பாதயாத்திரை என்று சொல்லப்பட்டாலும் பாதியாத்திரையாகவே இருக்கிறது. அவ்வப்பொழுது யாத்திரை நிறுத்தப்பட்டு பின்னர் நடத்தப்படுகிறது. புதுக்கோட்டையில் அண்ணாமலை யாத்திரை சென்றபோது அவ ருக்கு ‘வெள்ளாட்டு கிடா குட்டி’ ஒன்று பரிசாகத் தரப்பட்டுள்ளது. அந்த வெள்ளாட்டுக் குட்டிக்கு அண்ணாமலை சிவகாமி என்று பெயர் சூட்டியுள்ளார். உடனிருந்த தொண்டர்கள் அது ஆண் குட்டி என்று சுட்டிக்காட்டிய பிறகும் கண்டுகொள்ளாத அண்ணாமலை இது அதிக குட்டி போடும் என்று அருளாசி வழங்கியுள்ளார்.
இதைப் பார்க்கும் பொழுது 16 வயதினிலே படத்தில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னு யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு பூனைக்குஞ்சு சொன்னதுண்டு கதையிலதானே இப்ப காணுது பூமி’ இது மட்டுந்தானா இன்னும் இருக்குது சாமி’ என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது. அந்தப் பாடலின் முடிவில் ‘என் திறமையை காட்டட்டுமா, இரண்டு சங்கதிய போடட்டுமா’ என்று கவியரசர் முடித்திருப்பார். அண்ணாமலையும் தான் செல்லும் இடங்களி லெல்லாம் தன் திறமையைக் காட்டும் வகையில் சில சங்கதிகளை போட்டவாறு இரு க்கிறார். ரபேல் வாட்சை பார்த்துக்கொண்டே 20ஆயிரம் புத்தகம் படித்தவராயிற்றே!
இவர் பாதயாத்திரையை ஆரம்பித்த உடனேயே பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக பிய்த்துக் கொண்டு போய்விட்டது. சாத்தானை விட்டுவிட்டு வந்துவிட்டோம் என அதிமுக தலைவர்களில் ஒருவரான திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். இது கடைக்கோடி தொண்டன் எடுத்த முடிவு என்கிறார் எடப்பாடியார். விலகியது உண்மைதானா அல்லது நாடகமா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, அண்ணாமலை பாஜக தனித்து நின்று ஆட்சியைப் பிடித்துவிட்டது போலவும் எது முதல் கையெழுத்து
கருவாட்டுப் பானையை சுற்றுகிற கபட பூனைகளைப் போல அண்ணாமலை துவங்கி எச்.ராஜா வரை இந்து அறநிலையத் துறையை ஒழித்துக் கட்டுவதிலேயே குறியாக இருப்பது ஏன்? வேறு ஒன்றும் இல்லை, பயிரை காலம் காலமாக தின்று கொழுத்த மாடுகளுக்கு, வேலிகள் மீது வரும் கோபம்தான்.என்பதுதான் இப்போது பிரச்சனை என்பது போலவும் பேசி வருகிறார்.
சனாதன ஒழிப்பு மாநாடு குறித்து உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ள தகவல்களை இணைத்துப் பார்த்தால் அண்ணாமலை வகையறாவின் ஆத்திரத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு இந்துத்துவ இயக்கங்களைச் சேர்ந்த நபர்களிடமிருந்து ரூ.162 கோடியே 42 லட்சம் மதிப்புள்ள கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார். ‘இந்துத்துவா குரூப்பிடமிருந்து’ மீட்கப்பட்ட சொத்துக்களை அமைச்சர் சேகர்பாபு விரிவாக பட்டியலிட்டுள்ளார். அதில் திருவண்ணாமலை அம்மணியம்மாள் மடத்துக்குச் சொந்த மான ரூ.30 கோடி மதிப்புள்ள கட்டிடம் துவங்கி பண்ருட்டி குருலட்சுமி அம்மாள் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.100 கோடி அளவிலான சொத்துக்கள் வரை அடங்கும்.
இதுதவிர, திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு இதுவரை ரூ.5ஆயிரத்து132 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. அறநிலையத்துறையை அகற்றிவிட்டால் ‘சிவன்சொத்து குலநாசம்’ என்று ஊருக்கு உபதேசம் செய்துகொண்டே கோவில்களுக்குச் சொந்தமான அனைத்து சொத்துக்களையும் ஆட்டையை போட்டு அனுபவிக்கலாம் என்று கோவில் பெருச்சாளிகள் கருதுகின்றன. இதனால்தான் பாஜக வகையறா இந்து அறநிலையத்துறையின் மீது தீராத காய்ச்சலுடன் இருக்கிறது.
உள்ளூர் வாத்தியக் கோஷ்டிகள் மட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடியே உண்மைக்குப் புறம்பாக பேசி வருகிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தெலுங்கானா மாநிலத்தில் பிரச்சாரம் செய்யப் போனவர் தமிழ்நாட்டில் கோவில்கள் மாநில அரசால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன என்று பேசினார். இதற்கான ஆதாரம் எதையும் அவர் கொடுக்கவில்லை. அவர் எதற்குத்தான் ஆதாரம் கொடுத்திருக்கிறார்.
பிரதமர் கூறியதை நம்பி உச்சநீதிமன்றத்தில் அவரது கருத்தை வாதமாக வைத்த வகையறாக்களின் தலையில் நீதிபதிகள் ஓங்கி கொட்டி விரட்டியுள்ளனர். அனைத்து சாதியினர் மற்றும் பெண்களை அர்ச்சகர்களாகவும், ஓதுவார்களாகவும் தமிழக அரசு நியமித்து வருவது இந்துத்துவா மனுஸ்மிருதி கோஷ்டியாருக்கு பச்சை மிளகாயை கடித்தது போல மிகவும் எரிச்சலாக உள்ளது.
தமிழக அரசு அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமித்து வருகிறது. ஆகம கோவில்களில் நியமனம் கூடாது என தடைவிதித்து உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அர்ச்சகர் நியமனம் தொடர்பான வழக்குகளை உச்சநீதி மன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. ஆகம கோவில்களில் அர்ச்சகர்களாகும் தகுதி அனைத்து சாதியினருக்கும் இல்லை என்று தொடர்ந்து வழக்கு மேல் வழக்காக தொடுத்து சமூகநீதியை முடக்கி வைக்கிறது ஒரு கோஷ்டி. இந்து என்று ஏமாற்றும் இந்துத்துவாவினரின் சிந்தனையும் இதுதான். இந்த வழக்குகளின் பின்னால் இருப்பதும் அவர்கள்தான்.
உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதத்தின் போது அகில இந்திய ஆதி சிவாச்சாரியர்கள் சேவா சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தமிழக கோவில்களை மாநில அரசு ஆக்கிரமித்து வைத்துள்ளதாக பிரதமரே கூறியுள்ளார் என்று மேற்கோள் காட்டிய போது, அப்படியென்றால் பிரதமரிடமே சென்று கேட்டுக் கொள்ளுங்கள், இங்கே எதற்கு வந்தீர்கள் என நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அந்த வழக்கறிஞர்களை விமர்சித்துள்ளார்.
இந்து அறநிலையத்துறையை கலைக்க வேண்டுமென்று அண்ணாமலை கம்பெனி தொடர்ந்து அவதூறு பிரச்சாரம் செய்வதன் நோக்கம் இரண்டு. கோவில் சொத்துக்களை மன்னர் காலம் போல ஒரு சிலர் கொள்ளையடிக்கலாம் என்பது; மற்றொன்று அறநிலையத்துறை இல்லை என்றால் அனைத்து சாதியினரைச் சேர்ந்தவர்களும் தர்ம கர்த்தவாகவோ, அர்ச்சகர்களாகவோ, ஓதுவார்களாகவோ வர முடியாது என்பது. இதே காரணங்களால்தான் இந்து அறநிலையத்துறை நீடிக்க வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் விரும்புகிறார்கள். ஆட்டுக்கிடாய் குட்டி போடும்போது, அண்ணாமலை முதல்வராவார். அறநிலையத்துறையை கலைத்து முதல் கையெழுத்து போடுவார். அவரது கனவு கலையாதிருக்கட்டும்.