tamilnadu

img

டோல் இந்தியா நிறுவனத்தில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தி மனு அளித்தனர்

பெரியபாளையம் அருகில் உள்ள பனப்பாக்கத்தில் இயங்கி வரும் டோல் இந்தியா நிறுவனத்தில் உள்ளூரில் உள்ள சுமைப்பணி தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஜூலை 26 அன்று அந்த நிறுவனத்திற்கு சென்று மனு அளித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன், சுமைப்பணி சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.நாகேஷ்வரராவ், துணைத் தலைவர் பி.அருள், கிளை தலைவர் கே.சீனிவாசன், செயலாளர் கே.சேகர், பொருளாளர் சி.மோகன், நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.