tamilnadu

img

செங்கொடிபுரம் தூய்மை பணியாளர்களுக்கு வீட்டு மனை பட்டா கோரி அமைச்சரிடம் மனு

செங்கொடிபுரம் தூய்மை பணியாளர்களுக்கு  வீட்டு மனை பட்டா கோரி அமைச்சரிடம் மனு

சென்னை, அக்.15 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் பெ. சண்முகம் தலைமையில், டில்லி பாபு, ராமச்சந்திரன், செங்கொடிபுரம் குடி யிருப்போர் நல சங்கத்தின் தலைவர் முனியப்பன் ஆகி யோர்,  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரை சந்தித்து, தருமபுரியில் நூறாண்டு காலமாக குடி யிருந்து வரும் செங்கொடி புரம் தூய்மை பணியாளர்க ளுக்கு வீட்டு மனை பட்டா வழங்குமாறு கோரி நேரில் மனு அளித்து விரிவாக பேசினர். செங்கொடிபுரம் பகுதி ஆங்கிலேயர் காலத்தி லிருந்தே குடியிருப்பு பகுதி யாக இருந்து வருகிறது. இப்பகுதி 'ஸ்கேவஞ்சர்ஸ் சைட்' என்று இன்றைக்கும் அரசின் பதிவேடுகளில் பதியப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு பட்டா வழங்கிட கோரி பல ஆண்டு களாக நீண்ட நெடிய போராட்டத்தை சிபிஎம் மற்றும் செங்கொடிபுரம் குடியிருப்போர் நல சங்க மும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மேலும், சட்டமன்ற உறுப்பினராகவும் சிபிஎம் மாவட்டச் செய லாளராகவும் இருந்த டில்லிபாபு செங்கொடிபுரம் பகுதிக்கு பட்டா வழங்க வேண்டும் என்று சட்ட மன்றத்தில் வலியுறுத்தி பேசினார். அப்போது, நகராட்சி நிர்வாகமும் ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறையும் இணைந்து ஆய்வு செய்து பின்னர் பட்டா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின். தூய்மை  தொழிலாளர்கள் குடியிருப்  போர் குடும்ப பட்டியல் எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஓய்வு பெற்றோர் பட்டியலும் இணைக்கப்பட்டது. இப்பகுதியில் வசிப்பவர்கள் அனைவரும் அருந்ததியர் மற்றும் பன்னியாண்டி சமூ கத்தைச் சேர்ந்த குடும்பத்தி னர். நகரத்தை சுத்தம் செய்கின்ற தூய்மை பணி யாளர்களாக பணிபுரிபவர் கள். இவர்களது வீடுகள் 56 சென்ட் நிலத்தில் அமைந்துள்ள 54 குடும்பங்க ளாகும். சமீபத்தில் தமிழ்நாடு அரசு நகராட்சி, மாநகராட்சி போன்ற பகுதி களில் ஒரு சென்ட் நிலம் வீட்டுமனையாக இலவச மாகவும், அதற்கு மேல் இருப்பின் வருவாய் அடிப்படையில் பணம் செலுத்துவது என்ற விதிமுறைகளின் அடிப்படையில் அறிவித்த அரசாணையின்படி பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. நகராட்சி நிர்வாக துறை அமைச்சர், "தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற விவரங்களை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பெற்று, அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் நகராட்சிகளில் பட்டா வழங்கப்பட்டு வரு கிறது. இதற்காக தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் விவரத்தை கேட்டு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார். கடந்த காலத்தில் பேருந்து நிலையத்திற்கு அருகில் வணிக வளாகம் கட்ட இந்த இடம் தேவை என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால், தற்போது தரும புரி மாவட்டத்திற்கு புதிய பேருந்து நிலையம் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் பென்னாகரம் சாலையில் மாற்றப் பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. எனவே இந்த பகுதியில் நகராட்சி நிர்வாகம் வணிக வளாகமோ அல்லது மற்ற அமைப்புகளையோ கொண்டு வருவதற்கான வாய்ப்புகளே இல்லை. 100 ஆண்டு காலம் குடியி ருக்கும் ஏழை எளிய தூய்மை பணித் தொழி லாளர்களுக்கு பட்டா வழங்குவதற்கு அமைச்சர் கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரும் முன்வர வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டது. இதே செங்கொடி புரத்திற்கு பட்டா வழங்க வேண்டிய மனு, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடமும் செவ்வாயன்று (அக்.14) டில்லிபாபு மற்றும் முனியப்பன் ஆகியோரால் நேரில் சந்திக்கப்பட்டு மனு அளிக்கப்பட்டு விரிவாக விவாதிக்கப்பட்டது.