உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு
விழுப்புரம், அக்.24- உயர வளர்ச்சி தடைபட்ட மாற்றுத்தறனாளிகள் உலகத் தினத்தையோட்டி விழுப்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மனு அளித்தனர். இந்த போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் எம்.முருகன் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, தலைவர் ஜி.ஜெயக்குமார், பொருளாளர் எம்.யுகந்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். உயர வளர்ச்சி தடைபட்ட மாற்றுத்திறனாளிகளை கடும் ஊனம் உள்ளவர்களாக அறிவித்து, அரசின் அனைத்து திட்டங்களிலும் முன்னுரிமை வழங்க வேண்டும், சிறப்பு வசதிகளுடன் அரசு இலவச வீடுகள் வழங்க வேண்டும், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.6000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை அ
