tamilnadu

img

குடிமனை பட்டா கேட்டு வட்டாட்சியரிடம் மனு

சென்னை, நவ. 19 - சைதாப்பேட்டை தொகுதியில் பல வகையான நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதனன்று (நவ.20) கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசால் அங்கீ கரிக்கப்பட்ட ஜோதியம்மாள் நகரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 282 குடும்பங்கள் வசிக்கின்றன. கோட்டூர்புரம் சூரியா நகரில் 50 ஆண்டு களுக்கும் மேலாக 300 குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி மக்கள் குடும்ப அட்டை, மின்இணைப்பு உள்ளிட்ட அனைத்து ஆவ ணங்களையும் வைத்துள்ள னர். எனவே, தமிழக அரசு அண்மையில் வெளி யிட்டுள்ள அரசாணைப்படி பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்தப்போரா ட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து துணை வட்டாட்சியர் சிபிஎம் தலை வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மனுக்களை பெற்றுக் கொண்டார்.  மனுக்கள் மீது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.  சைதாப்பேட்டை பகுதிச் செயலாளர் ஜி.வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ், தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.செல்வா, மாவட்டக்குழு உறுப்பினர் சித்ரகலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.