tamilnadu

img

பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை

பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை அரசியலமைப்புச் சட்டம் 161 - ஐ பயன்படுத்தி விடுதலை செய்யக் கோரி தமிழக ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் பரங்கிப்பேட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் காந்தி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர் ஆழ்வார், துணை நிர்வாகிகள் முரளி, சிவலோகம், சாரதி, விஜய் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். கடலூரில் மாவட்டத் தலைவர் காந்தி தலைமை தாங்கினார். செயலாளர் கிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர் ஆழ்வார், துணை நிர்வாகிகள் முரளி, சிவலோகம், சாரதி, விஜய் ஆகியோர் கலந்துகொண்டனர்.