சென்னை,ஜன.12- முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தனது தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை அருகில் இருந்து கவனித்துக்கொள்ள ஏதுவாக பரோலில் வெளியே வந்தார். 2 மாத பரோல் முடிவடைந்த நிலையில், ஜோலார் பேட்டையில் உள்ள பேரறிவாளனின் இல்லத்தில் இருந்து துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன் அவர் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். செய்தியாளர்களைச் சந்தித்த அற்புதம்மாள், தமிழக அரசு விரைவில் தனது மகனை விடுதலை செய்யவேண்டும் என உருக்கத்துடன் கோரிக்கை விடுத்தார்.