tamilnadu

img

வெப்பம் அதிகரித்து வருவதால் மக்கள் வெளியே வர வேண்டாம் சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

சென்னை, ஏப். 30- வெப்பம் அதிகரித்து வரு வதால் சென்னை மக்கள் வெளியே தேவையின்றி  வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறி வுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. பகல் நேரங்க ளில் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிக மாக உள்ளது. மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் வியர்வை மழையில் நனைந்தபடியே கொளுத்தும் வெயிலில் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

இப்படி பக லில் அதிகரித்து காணப் படும் வெயிலால் இரவு நேரத்திலும் புழுக்கம் அதிகரித்து அனல் காற்று வீசுகிறது. மேலும் ஏப்ரல் தொடங்கி மே மாதம் வரை அக்னி நட்சத்திரம் வெயில் வாட்டி வதைக்கும். இந்நிலையில் கடும் வெயில் காரணமாக பொது மக்களுக்கு சென்னை மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு நட வடிக்கைகளை அறி வுறுத்தியுள்ளது.

வெப்பம் அதிகரித்து வருவதால் காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பொதுமக்கள் தேவை யில்லாமல் வெளியே வர வேண்டாம். மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும். நீர்ச்சத்துள்ள பழங்கள், கம்மங்கூழ், ராகிக்கூழ், கரும்புச்சாறு,நீராகாரம்,  இளநீர் பருகுவது நன்று. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம்  3 லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள் என மாவட்ட நிர்வாகம் அறி வுறுத்தியுள்ளது.