சென்னை, டிச. 19 - மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில், பயனடையும் 2 கோடியாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். பய னாளிகளுக்கு நலத்திட்ட உதவி களையும் வழங்கி வருகிறார்.
அதன்படி 2 நாள் சுற்றுப்பய ணமாக ஈரோடு மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், நஞ்சனாபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2 கோடியாவது பயனாளியான அதே பகுதியை சேர்ந்த சுந்தராம் பாளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருந்து பெட்டகங்களை வழங்கினார். முன்னதாக, இந்த திட்டத்தை 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் சாமண பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின்படி பய னாளிகளின் வீடுகளுக்கே சென்று மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் 2 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் இருக்கும். இந்த திட்டத்தின் 50-ஆவது லட்சம் பயனாளிக்கு சித்தலம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகம் வழங்கினார். 60-ஆவது லட்சம் பயனாளிக்கு மைட்டாபட்டியிலும், 75-ஆவது லட்சம் பயனாளிக்கு நாமக்கல் மாவட்டம் போதமலை யிலும், 80-ஆவது லட்சம் பய னாளிக்கு சைதாபேட்டையில், 90-ஆவது லட்சம் பயனாளிக்கு சென்னை விருகம்பாக்கத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மருந்து பெட்டகங்களை வழங்கினார்.
1 கோடியாவது பயனாளிக்கு திருச்சியில் நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருந்து பெட்டகம் வழங்கினார். இந்த திட்டத்தை பாராட்டி ஐ.நா.சபை சமீபத்தில் தமிழக அரசுக்கு விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது. வெள்ளிக்கிழமையன்றும் ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்யும் முதல்வர், முடிவுள்ள திட்டங்களைத் திறந்து வைக்கவும், பல்வேறு புதிய திட்டங்களைத் துவக்கி வைக்கவும் உள்ளார்.